இஸ்கண்டார் புத்திரி, கம்போங் பாரு முஃபகாட்டில் உள்ள வீடுகள் திடீர் வெள்ளத்தில் மூழ்கியதால், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 25 பேர் தற்காலிக நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்டனர்.
தொடர் கனமழை காரணமாக, இன்று திங்கட்கிழமை (ஜூன் 12) மதியம் 12.12 மணியளவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக இஸ்கண்டார் புத்திரி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி, முகமட் கைரி ஜைனுடின் தெரிவித்தார்.
“தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது தண்ணீர் இடுப்பு வரை உயர்ந்தது, ஆனால் அவர்கள் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரை மீட்டு, டேவான் கெலாங் பாத்தாவில் உள்ள தற்காலிக நிவாரண மையத்திற்கு மாற்றினார்கள்,” என்று அவர் கூறினார்.
“இந்த கிராமம் பொதுவாக கனமழையின் போது வெள்ளத்தில் மூழ்கிவிடும். தற்போது அங்கு தண்ணீர் வடியத் தொடங்கினாலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், கோத்தா இஸ்கண்டார் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ பண்டக் அகமட் கூறுகையில், கனமழையைத் தவிர, ஒவ்வொரு முறை மழையின் போதும் கிராமம் வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அருகிலுள்ள சுங்கை கெலாங் பாத்தாவை ஆழப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
“இந்த விஷயத்தை நாங்கள் இஸ்கண்டார் புத்திரி நகர சபை மற்றும் ஜோகூர் மாநில அரசாங்கத்துடன் விவாதிப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.