ஜோகூர் பாரு: ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காஸி, இங்குள்ள கண்ட்ரி கார்டன் அருகே ஜாலான் டாங்கா என்ற இடத்தில் சறுக்கி விழுந்து மோட்டார் சைக்கிளோட்டி வந்தவருக்கு உதவினார்.
திங்கள்கிழமை (ஜூன் 19) செனாய் மற்றும் ஸ்கூடாய் ஆகிய இடங்களில் சாலை சோதனை நடத்திவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார் ஓன். ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள், சம்பவத்தின் போது லார்கின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களுக்கு மந்திரி பெசார் உதவுவதைக் காட்டுகிறது.
காலை 8.49 மணிக்கு சம்பவம் குறித்து எங்களுக்கு அவசர அழைப்பு வந்தது என்று லார்கின் தீயணைப்பு நிலையத் தலைவர் சுஹைமி அப்துல் ஜமால் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சறுக்கி ஒரு காரை மோதியதாகவும், மீட்புக் குழுவினர் அவரை வெளியே இழுத்ததாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்காக சுல்தானா அமினா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் சுஹைமி கூறினார். காலை 9.16 மணிக்கு முடிவடைந்த இந்த நடவடிக்கையில் மூத்த அதிகாரி II அஸ்மி ஜோஹர் தலைமையில் 11 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.









