பயிற்சியில் உயிரிழந்த ஆயுதப்படை வீரர்களின் குடும்பத்தினருக்கு தோக் மாட் இரங்கல்

நேற்று பிற்பகல் கெமாஸில் உள்ள சையத் சிராஜுடின் முகாமின் நடந்த அடிப்படை கிரேனேட் பயிற்சி தளத்தில் ஆயுதப் பயிற்சியின் போது உயிரிழந்த ஆயுதப்படை வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் இரங்கல் தெரிவித்தார்.

“மறைந்த கார்ப்ரல் முகமட் சியூப் பிடின் மற்றும் லெப்டினன்ட் முகமட் இக்மல் மஸ்தி ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். நாட்டைக் காக்கும் பயிற்சியின் போது வீரர்கள் வீழ்ந்தனர். குடும்ப உறுப்பினர்களுக்கு விதியை ஏற்கும் வலிமை சேர்க்கட்டும் ” என்று அவர் தனது பேஸ்புக்கில் நேற்றிரவு பதிவிட்டுள்ளார்.

நேற்று நண்பகல் 12.10க்கு நடந்த இச்சம்பவத்தில், அரச மலேசிய விமானப்படை மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் பாதிக்கப்பட்ட மற்றொரு பயிற்சியாளர், சிகாமாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

மேலும் மற்றொரு பயிற்சியாளர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை வாரியம் அமைக்கப்படும் என்று மலேசிய ஆயுதப்படை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here