தாயை கொன்றதாக வேலையில்லா மகன் மீது குற்றச்சாட்டு

மூவார்: கடந்த வாரம்  தாமான் தெமியாங் உத்தாமாவில் உள்ள ஒரு வீட்டில் வேலையில்லாத ஒருவர் தனது தாயைக் கொன்றதாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

47 வயதான லிம் செங் சாய், ஜூன் 18 ஆம் தேதி இரவு 7 மணி முதல் 8.20 மணி வரை தனது தாயார் டான் சூ கெக்கை (73) கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் கட்டமைக்கப்பட்ட குற்றச்சாட்டில், மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால் 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆனால் 40 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் 12 அடிக்குக் குறையாத பிரம்படியும் வழங்கப்படும்.

புதன்கிழமை (ஜூன் 28) மாஜிஸ்திரேட் அனாலியா கமருதின் முன் குற்றச்சாட்டு அவரிடம் வாசிக்கப்பட்டபோது லிம் புரிந்துகொண்டு தலையசைத்தார். இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் வழக்கு இருப்பதால் எந்த ஒரு மனுவும் பதிவு செய்யப்படவில்லை.

பிரேதப் பரிசோதனை மற்றும் வேதியியல் அறிக்கைகளைப் பெற வேண்டியிருப்பதால ஜூலை 27ஆம் தேதிக்கு வழக்கினை நீதிமன்றம் ஒத்திவைத்தது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜோகூர் பாருவில் உள்ள பெர்மாய் மருத்துவமனையில் மனநல பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here