ஏர் ஏசியாவின் முன்னாள் தலைவர் பஹமின் ரஜப் காலமானார்

ஏர் ஏசியாவின் முன்னாள் தலைவர் டத்தோ பஹமின் ரஜப், லண்டன் செல்லும் விமானத்தில் திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.

இந்த தகவலை அவரது மருமகன் அசார் சுலைமான் இன்று காலை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள ஒரு பதிவின் மூலம் தெரிவித்தார்.

77 வயதான பஹமின், தனது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் சென்ற நிலையில், எதிர்பாராத விதமாக இத்துயர சம்பவம் நிகழ்ந்ததாகவும், தனது மாமனார் டத்தோ பஹாமின் ரஜப் அவர்களது பிரிவினால் அவர் மிகவும் வருந்துவதாகவும் அவர் பதிவேற்றிய குறித்த வீடியோவில் கூறினார்.

மேலும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நாளை லண்டன் செல்வார்கள் என்றும் அசார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here