கோலாலம்பூர்:
கிளாந்தான், பாசீர் மாஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், இரு சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் ஆபாசப் படங்கள் தயாரித்தது தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட 31 வயது மதப் போதகர் முகமட் ஃபாயிஸ் முகமட் ரம்லி, இன்று தம்மீதான குற்றங்களை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
கடந்த ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டு மே ஒன்பதாம் தேதி ஆகிய காலகட்டங்களில், ஜெலி பகுதியில் ஆறு மற்றும் எட்டு வயதுடைய இரு சிறுவர்களுக்கு எதிராக இந்த அத்துமீறல்களைச் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட இக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.
எனவே தான், துணை அரசு வழக்கறிஞர் சித்தி ஆய்ஷா நய்லா ஹரிசானின் வாதத்தை அடுத்து மாஜிஸ்திரேட் சையீட் ஃபாரிட் சையிட் அலி பிணையை மறுத்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணைக்காக ஜூன் பத்தாம் தேதியை நிர்ணயித்துள்ளார்.



















