கோத்தா பெலுட் –
குடும்ப தகராறு காரணமாக காட்டுப்பகுதிக்குள் ஓடிய பின் காணாமல் போன சிறுமி, திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் கம்போங் துதாரில் பத்திரமாக மீட்கப்பட்டார்.
அலிசா அஸ்லான், 11, என்ற சிறுமி கிராம மக்களால் பாதுகாப்பாகக் மீட்கப்பட்டார், ஆனால் குறித்த சிறுமி சோர்வாக இருந்தார். பின்னர் சிறுமி ஓய்வெடுக்க வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கோத்தா பெலுட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் முஹமட் சியாஸ்வான் லதுன் தெரிவித்தார்.
“குறித்த சிறுமி அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து வெளியே வந்து, கிராமத்தில் உள்ள ஒரு கடையில் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் ” என்று அவர் இன்று கூறினார்.
மேலும் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரவு 10.30 மணியளவில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை முடிவடைந்தது என்றும் அவர் கூறினார்.
சிறுமி தனது தங்கையுடன் சண்டையிட்டு காட்டிற்குள் ஓடிவிட்டதாக நேற்று திங்கட்கிழமை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.