வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ; புகையால் நால்வருக்கு சுவாசப்பாதிப்பு

நேற்று வியாழக்கிழமை (ஜூலை 13) இரவு அவர்கள் தங்கியிருந்த வீட்டில் தீப்பிடித்ததால், ஒரு தம்பதியும் அவர்களது இரண்டு குழந்தைகளும் புகை மூட்டத்தால் மூச்சடைத்ததில் சிரமப்பட்டனர்.

வியாழன் இரவு 11.55 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர், வான் முஹமட் ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.

” உடனடியாக இரண்டு தீயணைப்பு இயந்திரங்கள், ஒரு தண்ணீர் டேங்கர் மற்றும் இரண்டு அவசர மருத்துவ மீட்பு சேவை வாகனங்கள் உட்பட 20 தீயணைப்பு பணியாளர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பினோம்.

“அவர்கள் நள்ளிரவு 12.21 மணியளவில் ஜாலான் SE உத்தாமா, தாமான் சமுதேராவிற்கு வந்தபோது, ஒரு மூன்று அடுக்கு மாடி வீடு தீப்பிடித்ததைக் கண்டறிந்தனர்,” என்று அவர் கூறினார்.

இரண்டு குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய், தந்தை ஆகியோர் புகையை உள்ளிழுத்ததால், அவர்கள் மூச்சுவிட முடியாது திண்டாடினர்.

சம்பவ இடத்தில் இருந்த மருத்துவ பணியாளர்கள் புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்ததாகவும், அவர்களில் ஒரு பெண் குழந்தை சுயநினைவற்ற நிலையில் செலாயாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது என்றும் அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்ட மற்ற மூன்று பேரும் நிலையாக உள்ளனர்”.

தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், மீட்புப் பணிகளில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் அலியாஸ் டோல்லாவும் நடவடிக்கைகளின் போது, அந்தப் புகையை சுவாசித்ததாகவும், அவரும் சிகிச்சைக்காக செலாயாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here