குளுவாங் அருகே லோரி மரத்தில் மோதியதில் ஓட்டுநர் பலி

குளுவாங் அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (NSE) 71.6 கிலோமீட்டரில் மரத்தின் மீது லோரி மோதியதில் 54 வயது லோரி உயிரிழந்தார்.

நேற்று திங்கட்கிழமை (ஜூலை 17) இரவு 9.35 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், பாதிக்கப்பட்டவர் கோலாலம்பூரை நோக்கிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது என்று, குளுவாங் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் பஹ்ரின் முகமட் நோ இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) வெளியிட்டுள்ள அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

சம்பவ இடத்திற்கு வந்தபோது, லோரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறத்தில் உள்ள மரத்தில் மோதியது,” என்றும், பாதிக்கப்பட்டவரின் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்றும் அவர் கூறினார்.

மேலும் இவ்வழக்கு 1987ஆம் ஆண்டு சாலை மற்றும் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று முகமட் நோ தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here