ஜாலான் குவாந்தான்-சிகாமாட் சாலையில் விபத்து ; மூவர் பலி, 9 பேர் காயம்

பெக்கான், ஜாலான் குவாந்தான்-சிகாமாட் சாலையின் 65வது கிலோமீட்டரில், இன்று மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் இரண்டு முதியவர்கள் உட்பட மூன்று பேர் இறந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.

இதில், அயூப் ஜகாரியா, 66, போட்சியா தஹருன், 65, மற்றும் முஹமட் அஸ்ரின் அஹ்மட் நஸ்ரி, 19, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்தோடு காயமடைந்த 9 பேர் பெக்கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று, பெக்கான் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் ஜைடி மாட் ஜின் கூறினார்.

பெரோடுவா அல்சா, பெரோடுவா மைவி மற்றும் தோயோத்தா வியோஸ் ஆகிய மூன்று வாகனங்கள் 11.20 மணியளவில் விபத்துக்குள்ளானதாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறினார்.

“இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்றார்.

இதற்கிடையில், சினி மற்றும் பெக்கான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து 13 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து, மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட்தாக, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பகாங் மக்கள் தொடர்பு அதிகாரி, சுல்பாட்லி சகாரியா கூறினார்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here