பூலாய் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டத்தோஸ்ரீ சலாஹு டின் அயூப் காலமானதைத் தொடர்ந்து, ஜோகூரில் உள்ள பி161 பூலாய் நாடாளுமன்றத் தொகுதியின் காலியானது குறித்து தேர்தல் ஆணையத்திடம் (EC) மக்களவை அறிவித்தது.
மத்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 54 பிரிவு (1) இன் படி, குறித்த இடம் காலியாக இருப்பது உறுதிசெய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்று, நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் கூறினார்.
எனவே “நாடாளுமன்ற சபாநாயகர் என்ற முறையில், மறைந்த டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப் ஜூலை 23, 2023 ஞாயிற்றுக்கிழமை இறந்துவிட்டார் என்று, ஜூலை 25, 2023 தேதியிட்ட அறிவிப்பு மூலம் நான் தேர்தல் ஆணையத் தலைவருக்கு அறிவித்தேன்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.