சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 138 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை சனிக்கிழமை (ஜூலை 29) தாக்கல் செய்யப்படும்.
2008 முதல் மாநிலத்தை நிர்வகித்து வரும் பக்காத்தான் ஹராப்பான், தனது 44 வேட்பாளர்களை தேர்தல் களத்தில் இறக்குவதற்கு முடிவெடுத்துள்ளது, இதில் PKR-யிலிருந்து 20 பேர், DAP-யிலிருந்து 15 பேர் மற்றும் அமானாவில் இருந்து 9 பேர் என மொத்தம் 44பேர் உள்ளனர்.
அத்தோடு ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டாளிக் கட்சியான பாரிசான் நேசனலின் கீழ் 12 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுவதற்கான பெயர்பட்டியலில் உள்ளனர், இதனால் பக்காத்தானுக்கு அதன் ஆதிக்கத்தைத் தக்கவைக்க அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளன, குறிப்பாக பெரும்பான்மையான மலாய்க்காரர்கள் உள்ள பகுதிகளில் அதன் இருப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும்.