பூலாய் நாடாளுமன்றம், சிம்பாங் ஜெராம் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் செப்டம்பர் 9-இல் நடைபெறும்

கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 3:

ஜோகூரில் உள்ள பூலாய் நாடாளுமன்றம், சிம்பாங் ஜெராம் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்பாளர்களின் நியமனம் மற்றும் குறித்த இரண்டு இடங்களுக்கான முன்கூட்டியே வாக்களிக்கும் தேதி முறையே ஆகஸ்ட் 26 மற்றும் செப்டம்பர் 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று, தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சாலே கூறினார்.

குறித்த இரு தொகுதிகளிலும் உறுப்பினராக இருந்த டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப் தலையில் இரத்தக்கசிவு ஏற்படடதான் காரணமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஜூலை 23 அன்று எதிர்பாராத விதமாக P161 பூலாய் நாடாளுமன்றத் தொகுதியும் N13 சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியும் காலியானதைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here