ஷா ஆலாம், ஆகஸ்ட்டு 16:
நேற்றிரவு 3 மணி முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து, ஷா ஆலாமிலுள்ள Seksyen 13 ஐச் சுற்றியுள்ள சில பகுதிகள் கணுக்கால் மட்டம் வரையான வெள்ளத்தில் மூழ்கின.
பிற்பகல் 3.40 முதல் 4.30 மணிக்குள் தண்ணீர் மெதுமெதுவாக உயரத் தொடங்கியது என்று, ஷா ஆலாம் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.
ஆனால், தற்போது மழை நின்றுவிட்டதால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பத்து திகாவில் உள்ள சுங்கை டமன்சாரா, ஷா ஆலாம் அதன் எச்சரிக்கை அளவை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 5.35 மீட்டர் (மீ) அளவைப் பதிவுசெய்தது, இந்த அளவு அதன் இயல்பு அளவுடன் ஒப்பிடும்போது 2.7 மீ அதிகமாக உள்ளது, மேலும் தற்போது ஆற்றில் நீர் தொடர்ந்து அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகிறது.
முன்னதாக, பிரிவு 13 இல் உள்ள பல இடங்களில் வெள்ளநீர் ஓடுவது தொடர்பான வீடியோ பதிவுகள், வெள்ளம் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.