மேற்கு கனடாவில் காட்டுத்தீ 30,000 பேரை வெளியேற்ற உத்தரவு

மேற்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கெலோவ்னா நகரில் காட்டுத் தீ பரவியதால், சுமார் 30,000 பேர் தங்கள் வீடுகளை காலி செய்யுமாறு அம்மாகாண அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நிலைமை மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருப்பதால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர கால தாமதமாகிறது. தற்போது சுமார் 30,000 பேரை வெளியேற்றியதாகவும், மேலும் 36,000 பேர் வெளியேற்றும் எச்சரிக்கையில் உள்ளனர் என்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் அவசரகால மேலாண்மை மந்திரி போவின் மா கூறினார்.

150,000 பேர் மக்கள்தொகை கொண்ட நகரமான கெலோவ்னா பகுதியில் பல ஏக்கர்களை எரித்துள்ளது இந்த காட்டுத்தீ. அம்மாகாண்ம் முழுவதும் காட்டுத் தீயின் அடர்ந்த புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் விமானச் சேவையும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது, சுமார் 2500 விமானங்கள் தாமதமாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here