அமிருடின் இரண்டாவது முறையாக சிலாங்கூர் மந்திரி பெசாராக பதவியேற்றார்

கிள்ளான், ஆகஸ்ட்டு 21:

சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினர், டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிலாங்கூர் மந்திரி பெசாராக இரண்டாவது முறையாக பதவியேற்றார்.

இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 21) காலை 11 மணிக்கு இஸ்தானா ஆலாம் ஷாவில் சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா முன்னிலையில், அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

கறுப்பு நிற பாஜு மலாயு பாரம்பரிய உடை அணிந்து வந்த அமிருடின், மாநிலத்திற்கும் மக்களுக்கும் தன்னால் இயன்றளவு சேவை செய்வதாக உறுதியளித்தார்.

அவர் மந்திரி பெசாராக பதவியேற்ற உடனேயே சிலாங்கூர் சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் பதவியேற்றார்.

43 வயதான அமிருடின், 2018 ஆம் ஆண்டில் தனது முதல் பதவிக்காலமாக பதவியேற்றார், அப்போதைய மந்திரி பெசாராக இருந்த டத்தோஸ்ரீ அஸ்மின் அலிக்கு பதிலாக அவர் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here