கோலாலம்பூர்: டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 21) காலை 9.37 மணிக்கு கோலாலம்பூர் மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பியதாக பெர்னாமா செய்திகள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) சிறிய பல் அறுவை சிகிச்சைக்காக பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை ஒரு பேஸ்புக் பதிவில், திங்கள்கிழமை காலை வரை மருத்துவமனையில் இருக்க அறிவுறுத்தப்பட்டதாக அன்வர் கூறினார். தற்போது, நான் இன்னும் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளேன் என்று முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.









