பூலாவ் டிக்குஸ் காவல் நிலையத்தின் ஒரு அறை தீயில் சேதம்

ஜார்ஜ் டவுன்: பூலாவ் டிக்குஸ் காவல் நிலையத்தில் உள்ள ஒரு அறை இன்று காலை தீப்பிடித்து எரிந்தது. காலை 8.33 மணியளவில் இந்த சம்பவம் குறித்து பாகன் ஜெர்மால் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நடவடிக்கை அதிகாரி முகமட் ரஹ்மத் ஹுசைன் கூறுகையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது ஏர் கண்டிஷனிங் யூனிட் தீப்பிடித்து எரிவதை கண்டனர். தீயினால் அறையின் கட்டமைப்பில் 20% சேதமடைந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் போலீசார் தீயை அணைத்தனர். காலை 9.29 மணிக்கு பணி முடிந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here