பகாங் மாநிலத்தில் கையூட்டு வாங்கியதாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது 98 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தமக்கெதிரான அந்தக் குற்றச்சாட்டுகளை 54 வயது அனுவார் யாக்கோப் (Anuar Yaakob) மறுத்து, விசாரணை கோரினார்.
2021க்கும் 2022க்கும் இடையே 31,400 ரிங்கிட்டை அவர் கையூட்டாகப் பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமது அதிகாரத்துவ வேலை தொடர்பில் அவர் 100இல் இருந்து 2,000 ரிங்கிட் வரை அந்தக் கையூட்டுகளைப் பெற்றார் என்று நம்பப்படுகிறது. அந்தப் பணம் அவரது வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருக்கிறது.
30 ஆண்டுகளாக வேலை செய்துவரும் அனுவார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.