4 கார்கள் – லோரி சம்பந்தப்பட்ட விபத்து; 5 பேர் பலி

செகாமாட்: ஜாலான் செகாமாட்-குவாந்தான் கிலோமீட்டர் 5 இல் நான்கு கார்கள் மற்றும் ஒரு லோரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பண்டார் புத்ரா செகாமாட் தீயணைப்பு நிலையத்தின் கட்டளை அதிகாரி மர்சுகி இஸ்மாயில் கூறுகையில், மாலை 6.30 மணியளவில் ஒரு லோரி, பெரோடுவா அல்சா, ஹோண்டா எச்ஆர்வி, பெரோடுவா பெஸ்ஸா மற்றும் புரோட்டான் வீரா ஆகியவை விபத்துக்குள்ளானது.

மாலை 6.33 மணியளவில் அவசர அழைப்பு வந்ததையடுத்து, செகாமாட் மற்றும் பண்டார் பாரு செகாமாட் நிலையங்களில் இருந்து மொத்தம் 21 தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார். அல்சா காருக்குள் சிக்கிய பாதிக்கப்பட்டவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் ஒரு சிறப்பு உபகரணத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது என்று மர்சுகி கூறினார்.

இறந்தவர்கள் செகாமாட் மருத்துவமனை தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் காயமடைந்த மூன்று பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக செகாமாட் போலீஸ் தலைமை துணை கண்காணிப்பாளர் அஹ்மத் ஜம்ரி மரின்சா தெரிவித்தார்.

நாங்கள் தற்போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் விபத்துக்கான காரணத்தை அடையாளம் கண்டு வருகிறோம். இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here