குவாரி விபத்தில் சிக்கி வெளிநாட்டுத் தொழிலாளி பலி

ஈப்போ, கெரமாட் பூலாயில் உள்ள குவாரியில் ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டுத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு அதிகாரி ஃபைசருதின் முகமட் யூசோப்பின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 5) காலை 11 மணிக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்தது.

பாதிக்கப்பட்டவரின் கை கனரக இயந்திரங்களில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது சம்பவ இடத்தில் பாறை அசைவுகள் இருப்பதால் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள நீண்ட நேரம் பிடிக்கும்  என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here