பள்ளத்தில் விழுந்த லோரி- ஓட்டுநர் மரணம்

கோத்த கினபாலு, குனாக்கில் செவ்வாய்க்கிழமை (செப். 5)  வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 43 வயது லோரி ஓட்டுநர் உயிரிழந்தார். தீயணைப்பு வீரர்கள் வாகனத்தில் இருந்து அவரது உடலை அகற்றிய பிறகு, சனுதின் டிஜிடி இறந்ததாக மருத்துவ அதிகாரி அறிவித்தார்.

ஜாலான் துன் ஃபுவாட், லாடாங் சுங்காங்கில் விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு காலை 10.33 மணிக்கு அழைப்பு வந்தது. குனாக் தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒரு குழு அனுப்பப்பட்டது மற்றும் அவர்கள் வாகனத்திற்குள் சிக்கிய பலியானவரின் உடலை மீட்டனர். அவரது உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் நடவடிக்கை 11.45 மணியளவில் முடிவடைந்தது என்று பேச்சாளர்  கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here