பேராக்கை சேர்ந்த மருத்துவர் ஹர்வின் லோகநாதன் சாலை விபத்தில் உயிரிழந்தார்

கோத்த கினபாலு, லாபுவானில் புதன்கிழமை (செப்டம்பர் 6) அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியதில் பேராக்கைச் சேர்ந்த மருத்துவர் உயிரிழந்தார். காலை 7.50 மணியளவில் சிம்பாங் ரங்காஸ் அருகே நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து சிமோர் நகரத்தைச் சேர்ந்த ஹர்வின் லோங்கநாதன் 30, சம்பவ இடத்திலேயே இறந்தார். லாபுவான் காவல்துறைத் தலைவர்  முகமட் ஹமிசி ஹலிம் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் ஜாலான் பெபுலோ வழியாக சாலை வளைவில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்தார்.

இதன் விளைவாக, அவரது மோட்டார் சைக்கிள் எதிர் பாதையில் சென்று 38 வயது பெண் ஓட்டி வந்த கார் மீது மோதியது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். பலியானவரின் உடல் லாபுவான் நியூக்ளியஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதற்காக சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் இந்த சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாக  முகமட் ஹமிசி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here