ஜோகூர் பாரு:
இன்று சனிக்கிழமை (செப். 9) நண்பகல் நிலவரப்படி இடைத்தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை பூலாயில் 24 விழுக்காட்டினரும் சிம்பாங் ஜெராமில் 33 விழுக்காட்டினருமாக பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இரண்டு தொகுதிகளிலும் காலையில் மழையும், மாலையில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதற்கிடையில், நிச்சயமற்ற காலநிலை காரணமாக தங்கள் கடமைகளை முன்கூட்டியே நிறைவேற்றுமாறு தேர்தல் ஆணையத்தின் (EC) அறிவுரையை பின்பற்றி வாக்காளர்கள் அதிகமானோர் வாக்குச்சாவடிகளுக்கு வருவதைக் காண முடிந்தது.
சிம்பாங் ஜெராமில் மொத்தம் 40,488 வாக்காளர்களும், பூலாயில் மொத்தம் 166,653 வாக்காளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.