பாலேக் பூலாவ், சிங்கப்பூரில் இருந்து ஒன்பது சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த வேன், பினாங்கில் உள்ள புக்கிட் கெட்டிங் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 24) இரவு 8 மணியளவில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் வேன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
கனமழைக்கு மத்தியில் சிக்கிய சுற்றுலாப் பயணிகளை மீட்கும் பணியை மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணியில் தன்னார்வத் தீயணைப்பு வீரர்கள் மற்றும் சமூக அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவும் (CERT) உதவுகின்றனர்.