புதரில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆடவர் பொதுமக்களால் பிடிப்பட்டார்

கோத்த கினபாலு: சபாவின் வடக்கு குடாட் மாவட்டத்தின் சாலையோர புதரில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபர் பொதுமக்களால் பிடிப்பட்டார். திங்கள்கிழமை (அக்டோபர் 9) காலை 6 மணியளவில் 30 வயதுடைய சந்தேக நபரை அவ்வழியாகச் சென்றவர்கள் தடுத்து நிறுத்தியதாகத் தெரியவந்துள்ளது.

குடாட் காவல்துறைத் தலைவர் முகமட் ஹரிஸ் இப்ராஹிம் கூறுகையில், இது குறித்து தங்களுக்கு காலை 7.05 மணிக்கு எச்சரிக்கப்பட்டது. சந்தேக நபரை பொதுமக்கள் ஒப்படைத்த பின்னரே நாங்கள் தடுத்து வைத்தோம். இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 376இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

சந்தேக நபரை பிடிக்க உதவிய மக்களுக்கு சு முகமட் ஹாரிஸ் நன்றி தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பான விவரங்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்றும் இது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அதை போலீசாரின் விசாரணைக்கு விட்டு விடுங்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here