மின்சாரம் தாக்கி இரு தொழிலாளர்கள் பலி

ஈப்போ, தாமான் பெர்ச்சாம் ராயாவில் பர்கர்கள் விற்கும் கடையில் இரண்டு தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை (அக். 15) அதிகாலை 1.15 மணியளவில் தம்புன் காவல் நிலையத்திற்கு இறப்புகள் குறித்து பொதுமக்களிடமிருந்து அழைப்பு வந்ததாக ஈப்போ காவல்துறைத் தலைவர் யஹாயா ஹாசன் தெரிவித்தார். பலியானவர்கள் 14 மற்றும் 30 வயதுடைய நண்பர்கள்.

இருவரும் கடையின் ஓரத்தில் சுயநினைவின்றி காணப்பட்டனர். மேலும் அவர்களின் மரணம் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது.

கடையில் உதவியாளர்களாக பணியமர்த்தப்பட்ட இருவரும், கடையில் பணிபுரியும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஏசிபி யஹாயா தெரிவித்தார். மரணத்திற்கான காரணத்தை அறிய உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here