1எம்டிபி சொத்துக்களுடன் தொடர்புடைய மற்றொரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்

வெளிநாட்டில் உள்ள மற்றொரு நபர் மில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள 1எம்டிபி-யுடன் இணைக்கப்பட்ட சொத்துக்களை மீட்டெடுக்க வழிவகுத்ததாக என்று காவல்துறை கூறுகிறது. புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிசிஐடி) இயக்குநர்  டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப்  கூறுகையில், கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியின் முன்னாள் வங்கியாளர் ரோஜர் இங் சோங் ஹ்வா நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த நபர் அடையாளம் காணப்பட்டார்.

எங்கள் விசாரணையானது சொத்து மீட்பை நோக்கி மேலும் செல்கிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களை மீட்க முடியும் என்பதற்கான சாதகமான அறிகுறிகள் உள்ளன என்று அவர் கூறினார்.

வியாழக்கிழமை (அக். 26) சிசிஐடி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  ரம்லி முகமது மேலும் கூறுகையில், இந்த சொத்துக்கள் ரோஜரை உள்ளடக்கியது அல்ல. ஆனால் வெளிநாட்டில் உள்ள மற்றொரு நபரை உள்ளடக்கியது. இந்த நேரத்தில் கேள்விக்குரிய நபரின் பெயரைக் குறிப்பிட அவர் மறுத்துவிட்டார், இது விசாரணைகளை பாதிக்கலாம் என்று கூறினார்.

அக்டோபர் 8 ஆம் தேதி, இந்த வழக்கை விசாரிப்பதில் உதவுவதற்காக Ng நாட்டிற்கு வந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் இருக்கும் இடத்தை வெளியிடவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி, 1MDB இலிருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை மோசடி செய்ய சதி செய்ததற்காக அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தால் Ng குற்றவாளி எனக் கண்டறியப்பட்டது, பின்னர் நியூயார்க்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னாள் வங்கியாளருக்கு எதிராக முழுமையான விசாரணை நடத்த போலீசாருக்கு தேவையான அவகாசம் வழங்குமாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் முன்னர் பொதுமக்களை வலியுறுத்தியிருந்தார். அதிகாரிகள் திருப்தி அடையும் வரை 51 வயது நபருக்கு எதிரான விசாரணை தொடரும் என்றார்.

இந்த விசாரணைக்கு காலக்கெடு எதுவும் இல்லை. எனவே நாங்கள் திருப்தி அடையும் வரை (எங்கள் விசாரணை) தொடர்வோம். ஏனெனில் இது அரசாங்கத்தின் மற்றும் பொதுமக்களின் பணம் பணயம் வைக்கப்பட்டுள்ளது என்று அவர் மேற்கோள் காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here