2 தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட பெண் சடலமாக மீட்பு

பெட்டாலிங் ஜெயாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு குடும்ப உறுப்பினர்களால் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட ஒரு பெண் காரில் இறந்து கிடந்தார்.

வெள்ளியன்று (அக் 27), பெட்டாலிங் ஜெயா காவல்துறைத் தலைவர் முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமிட், சுங்கை பூலோ ஓவர்ஹெட் பிரிட்ஜ் உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்தார். காலை 10.50 மணிக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

முப்பதுகளில் ஒரு பெண்ணின் சடலம் ஒரு வெள்ளை நிற காருக்குள் கண்டெடுக்கப்பட்டது என்று அவர் கூறினார். உடலில் கண்டுபிடிக்கப்பட்ட அடையாளம், அக்டோபர் 25 அன்று தாமான் கெப்போங்கில் பதிவு செய்யப்பட்ட காணாமல் போன நபரின் புகாருடன்  ஒத்து போனதாக தெரிவித்தார். இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here