நிலச்சரிவில் இருந்து அதிர்ஷடவசமாக 73 வயது மூதாட்டி உள்ளிட்ட மூவர் உயிர் தப்பினர்

ஈப்போ: செவ்வாய்கிழமை (நவம்பர் 7) பிற்பகல், கம்போங் டத்தோ அகமட் சைட் தம்பஹான் பாரு 1ல் உள்ள மஞ்சோய் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து இரண்டு ஆண்களும் 73 வயது மூதாட்டியும் காயமின்றி தப்பினர்.

பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) சபரோட்ஸி நோர் அஹ்மத் கூறுகையில் சம்பவம் தொடர்பாக மாலை 4.34 மணிக்கு அழைப்பு வந்ததாகவும் மேரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (பிபிபி) தீயணைப்புப் படையினர் பாசீர் பூத்தே பிபிபியைச் சேர்ந்த பணியாளர்களின் உதவியுடன் சுமார் அரை மணி நேரத்தில் அங்கு வந்ததாகவும் கூறினார்.

ஒரு மலையோர வீட்டின் அருகில் நிலச்சரிவு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்து மக்களை வெளியேற்றத் தொடர்ந்தனர் என்று அவர் செவ்வாய்க்கிழமை இரவு கூறினார். இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரு வேனையும் தீயணைப்பு வீரர்கள் அகற்றியதாக சபரோட்ஸி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here