அனைத்துலக அளவில் சர்க்கரை விலை அதிகரித்துள்ளதால், அரசாங்கம் சர்க்கரையின் உச்சவரம்பு விலையை RM2.85 லிருந்து RM3.80 ஆக உயர்த்த வேண்டும் அல்லது அதிகரிக்க வேண்டும் என்று மைடின் நிர்வாக இயக்குநர் அமீர் அலி மைடின் கூறுகிறார். மூலப்பொருட்களின் விலை அதிகரித்து வருவதால், சர்க்கரைக்கான தற்போதைய உச்சவரம்பு RM2.85 விலையானது “தர்க்கமற்றது” என்று அமீர் கூறினார்.
உள்ளூர் சர்க்கரை உற்பத்தி செய்யும் நிறுவனங்களான MSM Malaysia Holdings Bhd (MSM) மற்றும் Central Sugars Refinery Sdn Bhd ஆகியவை உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு 1 கிலோவிற்கும் 80 சென் கூடுதல் செலவாகிறது என்றார். மாற்றாக, இந்த நிறுவனங்களுக்கு அரசாங்கம் நேரடி மானியங்களை வழங்க முடியும் என்று அமீர் கூறினார். இருப்பினும், மலேசியாவின் சர்க்கரை விலை அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவாக இருப்பதால், இதுபோன்ற நடவடிக்கைகள் கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தாது என்று அவர் கூறினார்.
உச்சவரம்பு விலையை உயர்த்துவது நல்லது. ஏனென்றால் மானிய வழிமுறைகள் பெரும்பாலும் கசிவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை நாங்கள் அறிவோம். மேலும் பல கசிவுகள் (நடக்கிறது) இருப்பதை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதுஎன்று அவர் கூறினார். இங்கே சர்க்கரை மலிவானதாக இருந்தால், அது அண்டை நாடுகளுக்கு கடத்தப்படும். சிறந்த முறையில், சர்க்கரைக்கு மானியம் வழங்கப்படாமல், RM3.80 கட்டுப்பாட்டு விலையாக நிர்ணயிக்க வேண்டும். அல்லது கோழியை நாங்கள் செய்ததைப் போல சந்தை விலையை தீர்மானிக்கும் வகையில் அது சந்தை விலைகேற்ப இருக்க வேண்டும்.
அக்டோபர் 10 அன்று, Felda தலைவர் அஹ்மத் ஷபேரி சீக் கூறுகையில், MSM இன் முக்கிய பங்குதாரர்களான FGV ஹோல்டிங்ஸ் Bhd மற்றும் Koperasi Permodalan Felda Bhd ஆகியவற்றின் பங்குதாரர்களாக குடியேறியவர்கள் சர்க்கரை விலை குறைவாக இருந்தால், அவர்கள் தொடர்ச்சியான இழப்பை சந்திக்க நேரிடும். 2020 ஆம் ஆண்டிலிருந்து கச்சா சர்க்கரையின் விலை உயர்ந்து வருவதால், சர்க்கரையின் உண்மையான விலை, ஒரு கிலோவுக்கு அரசாங்கத்தின் உச்சவரம்பு விலையான RM2.85 ஐ விட அதிகமாக உள்ளது என்றும், கடந்த ஆண்டு MSM இன் RM178 மில்லியன் இழப்பு ஃபெல்டாவை கடுமையாக பாதித்துள்ளது என்றும் ஷபேரி கூறினார்.
சர்க்கரை விலையை உயர்த்துவது, கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கவும், குடியேறுபவர்கள் மேலும் நஷ்டம் அடைவதை தடுக்கவும் உதவும் என்று அமீர் கூறினார். மக்கள் ஒவ்வொரு நாளும் 1 கிலோ சர்க்கரையைப் பயன்படுத்துவதில்லை என்பதால் (முடிவெடுக்க) பயப்பட வேண்டாம் என்று அவர் கூறினார். ஆமாம், சர்க்கரை பல பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது என்பது உண்மைதான், ஆனால் உலகளாவிய விலை உயர்ந்துள்ளது. சரியான முடிவை எடுக்க அரசியல் தைரியம் வேண்டும் என்றார்.









