சீன மூலிகை பான நிறுவனம் அதன் தயாரிப்புகளை சந்தைப்படுத்த தனது படத்தை தவறாகப் பயன்படுத்திய விவகாரம் குறித்து நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவிருப்பதாக முன்னாள் சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா X க்கு தெரிவித்தார். பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் ஒரு நிறுவனத்தின் பொறுப்பற்ற மார்க்கெட்டிங் இது. என்ன வெட்கக்கேடான செயல் என்றார் அவர்.
டாக்டர் நூர் ஹிஷாம் நிறுவனம் மீது வழக்குத் தொடர வேண்டுமா என்று பயனர்களிடம் கேட்டார். நான் அவர்கள் மீது எவ்வளவு வழக்குத் தொடர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? இது மற்ற நிறுவனங்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். நான் வெற்றி பெற்றால் வெற்றியைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
டாக்டர் நூர் ஹிஷாமின் படம் முன்பு நீரிழிவு மருந்துகள் மற்றும் போலி அதிசய சிகிச்சைகளை அங்கீகரிக்க பயன்படுத்தப்பட்டது. அப்போது அவர் நிறுவனங்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்தார்.