ஒரு வருடம் மடானி அரசாங்கத்துடன் நிகழ்வுடன் இணைந்து போக்குவரத்து சம்மன்களில் 50% தள்ளுபடி டிசம்பர் 8 முதல் 10 வரை வழங்கப்படவுள்ளது. கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் அஸ்மான் அஹ்மத் சப்ரி கூறுகையில், புக்கிட் ஜாலில் தேசிய மைதானத்தில் உள்ள போக்குவரத்து அபராத விசாரணை மற்றும் கட்டண முகப்பிடங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அபாரதத் தொகையை செலுத்த முடியும்.
2023 ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து குற்றங்கள், விபத்து தொடர்பான அபராதங்கள், கைது வாரண்ட்கள் உள்ள நீதிமன்ற வழக்குகள் அல்லது இன்னும் விசாரணையில் உள்ள வழக்குகள் மற்றும் கூட்டுச் சேர்க்க முடியாத குற்றங்கள் ஆகியவை இந்த சலுகையில் சேர்க்கப்படவில்லை. நெரிசலைத் தவிர்க்கவும், பணம் செலுத்தும் செயல்முறையை எளிதாக்கவும் பணம் செலுத்தும் கவுண்டருக்குச் செல்லும் முன் MyBayar PDRM போர்ட்டல் மற்றும் செயலி மூலம் தங்கள் அபராதங்களை முன்கூட்டியே சரிபார்க்குமாறு அஸ்மான் பொதுமக்களை வலியுறுத்தினார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டை நினைவு கூறும் வகையில் இந்த மூன்று நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் அலுவலகத்தின் கீழ் உள்ள ஒரு பிரிவும் மலேசியா உற்பத்தித்திறன் கழகமும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.