தீ விபத்தில் உயிரிழந்த முதியவர்

கோத்த கினபாலு, சபாவின் கிழக்கு கடற்கரை செம்போர்னா மாவட்டத்தில் உள்ள  கிராமத்தில் 6 வீடுகள் தீயில் எரிந்ததில் முதியவர் ஒருவர் இறந்தார். திங்கள்கிழமை (டிசம்பர் 4) காலை 10 மணியளவில் கம்போங் டெபியன் பகாவ் என்ற இடத்தில் ஏற்பட்ட தீயை அணைத்த பிறகு, அடையாளம் தெரியாத ஆடவரின் எரிந்த உடல் இடிபாடுகளுக்கு மத்தியில் தீயணைப்பு வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. உள்ளூர்வாசிகள் அந்த நபரை லேடின் 55 என்று மட்டுமே அடையாளம் கண்டுள்ளனர். அவர் வெளிநாட்டவர் என்று நம்பப்படுகிறது.

காலை 9 மணியளவில் தீ விபத்து குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். காலை 9.45 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் ஆறு மர வீடுகள், ஒரு கடை மற்றும் இரண்டு வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர் காலை 11.16 மணியளவில் வீடு ஒன்றின் இடிபாடுகளுக்கு மத்தியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார். அவரது சடலம் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here