சென்னை:
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அமீர் கான் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் இது குறித்து அறிந்து முதல் ஆளாக வந்து நடிகர் அஜித் உதவியுள்ளார்.
இந்த வெள்ளத்தால் பல பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நடிகர் விஷால் காரப்பாக்கம் பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில் வெள்ளம் புகுந்துவிட்டதா கவும் யாரும் தங்களை மீட்க வரவில்லை என தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டி ருந்தார். இந்தப் பதிவை போட்ட சில மணி நேரங்களில் காரப்பாக்கம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மக்களைத் தமிழக தீயணைப்பு துறையைச் சேர்ந்த வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
அதே பகுதியில் தன்னுடைய தாயாரின் சிகிச்சைக்காக அங்கு தங்கி இருந்த பாலிவுட் நடிகர் அமீர் கானும் விஷ்ணு விஷாலுடன் சிறிய படகு மூலம் வெளியேறினார்.
இந்தச் செய்தி அறிந்து நடிகர் அஜித், விஷ்ணு விஷால் மற்றும் அமீர் கானைச் சந்தித் துள்ளார். மேலும் அவர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல அஜித் வாகனம் ஏற் பாடு செய்து உதவியுள்ளார். இந்தத் தகவலை விஷ்ணு விஷால் அஜித்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.