“ஹமாஸ் போர் எப்போது தான் முடியும்..” ஒரே வரியில் இஸ்ரேல் சொன்ன பதில்!

டெல் அவிவ்:

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களைக் கடந்து தொடரும் நிலையில், இது எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் விளக்கமளித்துள்ளார், இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது.

இந்தப் போருக்குச் சர்வதேச அளவில் அழுத்தமும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. இந்தப் போர் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடரும் நிலையில், இது பிராந்திய போராக மாறாமல் இருக்க வேண்டும் என்பதாலேயே அனைத்து நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்துகிறது.

இதற்கிடையே இஸ்ரேல் ஹமாஸ் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து இஸ்ரேல் தரப்பு விளக்கமளித்துள்ளது. இஸ்ரேல் அடைய வேண்டிய இலக்குகளை அடைந்த பிறகே காசாவில் ஹமாஸுக்கு எதிரான இந்த போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட் கூறியுள்ளார். வடக்கு காசா பகுதியில் உள்ள ஹமாஸின் ஜபாலியா மற்றும் ஷேஜய்யா பட்டாலியன்கள் அழிக்கப்படும் விளிம்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த போர் அதன் இலக்குகளை அடையும் போது முடிவுக்கு வரும். அமெரிக்கா சொல்லும் அனைத்தையும் நாங்கள் கருத்தில் கொள்கிறோம். அதை ஆலோசனை செய்கிறோம். அமைச்சர்கள் உடன் ஆலோசனை செய்து இது தொடர் பாக முடிவு எடுக்கப்படும். ஹமாஸ் வசம் இன்னுமே பல பிணையக் கைதிகள் இருக்கி றார்கள். நாங்கள் ராணுவ ரீதியாக அழுத்தத்தை அதிகரித்தால் கூடுதலாகப் பிணை யக் கைதிகளை விடுவிக்க முடியும் என்ற நம்புகிறோம். அதை நோக்கியே நடவடிக்கை எடுப்போம். ஹமாஸ் கோட்டைகளான ஜபாலியா மற்றும் ஷேஜாயாவில் அவர்கள் அழியும் தறுவாயில் இருக்கின்றனர். இப்போது பல பகுதிகளில் ஹமாஸ் படை தொடர்ச்சியாகச் சரணடைந்து வருகிறது.

வெல்லவே முடியாத படைகளாகக் கருதப்பட்ட படைகளை நாங்கள் வரிசையாக வென்று வருகிறோம். அதேநேரம் போர் விதிமுறைகளை நாங்கள் மீறுவதில்லை. யார் சரணடைந்தாலும் அவரது உயிர் காப்பாற்றப்படும் சரணடைந்தோரிடம் கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை செய்து வருகி றோம். ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாருக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். எங்களைப் பொறுத்தவரை ஹமாஸ் தலைவரும் ஒன்றுதான் சாதாரண வீரனும் ஒன்று தான். எனவே, உயிர் பிழைக்க வேண்டும் என்றால் சரணடைந்துவிடுங்கள். உங்க ளுக்கு வேறு வழியில்லை. கடந்த மாதத்தில் மட்டும் காசா பகுதியில் 500க்கும் மேற் பட்ட பயங்கரவாதிகளை நாங்கள் கைது செய்துள்ளோம்” என்றார்.

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டது. மொத்தம் 7 நாட்கள் போர் நிறுத்தம் நீட்டித்த நிலையில், அப்போது ஹமாஸ் பல பிணையக் கைதி களை விடுவித்தது. அதேபோல இஸ்ரேல் வசம் இருந்த பல பாலஸ்தீன கைதிகளையும் ஹமாஸ் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here