மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) மீண்டும் ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் செல்லவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மித்ரா ஒரு இந்திய துணையமைச்சரிடம் வழங்கப்படலாம் என்றும் அறியப்படுகிறது. இந்தியர்கள் ஏற்கெனவே பல வித இன்னல்களை அனுபவித்து வரும் வேளையில் மித்ரா கைமாறுகிறது என்பது வேதனையான விஷயமாகும்.
இந்தியர்களின் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதியை மித்ரா கையாண்டு வரும் வேளையில் அடிக்கடி இப்படி அமைச்சினை மாற்றுவது சரியான முடிவா என்பதனை அரசாங்கம் யோசிக்க வேண்டும். ஏற்கெனவே ஒரு முழு அமைச்சர் இல்லாதது பேசும் பொருளாக இருக்கும் வேளையில் மித்ரா ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் மாற்றப்படுவது இந்தியர்களின் நலன் கேள்விக்குறியாகுமா?