கோலாலம்பூர்: ஜாலான் புடுவிலிருந்து ஜாலான் யூ வரையிலான ஸ்லிப் ரோடு டிசம்பர் 27 முதல் ஜனவரி 12, 2025 வரை அனைத்து போக்குவரத்துக்கும் மூடப்படும். கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்) வியாழக்கிழமை (டிசம்பர் 21) ஒரு அறிக்கையில், ஜாலான் சுங்கை பீசி (புது காவல்துறைக்கு அடுத்ததாக) செல்லும் புது சுற்று வட்டப்பாதையில் உள்ள சாய்வுப் பாலத்தை இடித்துவிட்டு பாலத்தை புனரமைப்பதற்கு வசதியாக மூடப்படுவதாக அறிவித்தது.
மாற்றாக, சாலையைப் பயன்படுத்துவோர் ஜாலான் சுங்கை பீசி, ஜாலான் ஃபோஸ், ஜாலான் சான் சோவ் லின், ஜாலான் சாது, ஜாலான் துவா மற்றும் ஜாலான் தீகா வழியாக மாற்றுப்பாதையைப் பயன்படுத்தலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே, சாலையைப் பயன்படுத்துவோர், இடத்திலுள்ள அறிவிப்பு பலகைகளுக்கு இணங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் எந்தவொரு குழப்பத்தையும் தவிர்க்க, வழிகாட்டி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக போக்குவரத்து போலீசாரின் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.