கோலாலம்பூர்: கெந்திங் ஹைலண்ட்ஸில் உள்ள தங்குமிடம் (ஹோட்டல்) வெள்ளியன்று (டிச. 23) உள்ளூர் ஆடவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சம்பவம் நடந்த அதே நாளில் ஹோட்டலுக்கு அருகில் 45 வயதான ஆண் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பெந்தோங் மாவட்ட காவல்துறை தலைவர் சைஹாம் முகமட் கஹர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவரின் உடல் குவாந்தனில் உள்ள தெங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
அதே நேரத்தில் முதற்கட்ட விசாரணைகள் பாதிக்கப்பட்டவரின் உடலில் போராட்டத்தின் அறிகுறிகளை சுட்டிக்காட்டுகின்றன. பாதிக்கப்பட்ட 51 வயதானவர் ஒரு தொழிலதிபர் மற்றும் போதைப்பொருள் உட்பட 23 கடந்தகால குற்றவியல் பதிவுகளை கொண்டிருந்தார். பிரேத பரிசோதனையின் முடிவுகள் இன்று பிற்பகலுக்குப் பிறகு பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் சனிக்கிழமை (டிசம்பர் 23) கூறினார். கொலைக் குற்றத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் விசாரணைகளுக்காக சந்தேகநபர் இன்று முதல் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று சைஹாம் கூறினார்.