கோலாலம்பூர்:
நாட்டில் சட்டவிரோத குடியேறியவர்களின் முக்கிய ‘குடியேற்றமாக’ மாற்றப்பட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது என்று தேசிய காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.
அவற்றில் கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜோகூர், கெடா மற்றும் கிளந்தான் ஆகிய பகுதிகளில் சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
“சட்டவிரோத குடியேறிகளால் (வெளிநாட்டினர்) கட்டுப்படுத்தப்படும் வளாகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதிகளிளை காவல்துறை தொடர்ந்து கண்காணித்து, சோதனைகளை மேற்கொள்ளும் என்றும், இவ்வாறான நடவடிக்கைகள் வெளிநாட்டினரின் சட்டவிரோத வருகையைத் தடுக்க உதவும் என்றும் அவர் கூறினார்.