கோலாலம்பூர்:
மலர்ந்திருக்கும் இந்த புத்தாண்டில் மலேசியர்கள் அனைவரும் நல்வாழ்வு மற்றும் செழிப்புடன் இருக்க ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
“முழு தேசமும் செழிப்பு, நல்வாழ்வு மற்றும் செழுமையுடன் இருக்க ஆசீர்வதிக்கப்படட்டும், மேலும் பேரழிவுகளிலிருந்து இறைவன் நம் அனைவரையும் பாதுகாக்கட்டும், நாம் அனைவரும் சிறந்த ஆரோக்கியம், ஒற்றுமை மற்றும் நீடித்த நல்லிணக்கத்தையும் பெறுவோம்” என்று இஸ்தானா நெகாராவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளனர்.