ஜெய்ன் ரயான் கொலை வழக்கு: இன்னும் ‘NFA’ வகைப்படுத்தப்படவில்லை – காவல்துறை

ஆட்டிஸம் குழந்தை ஜெய்ன் ரயான் அப்துல் மதினின் கொலையை “மேலும் நடவடிக்கை இல்லை” (NFA) வழக்கின் கீழ் காவல்துறை வகைப்படுத்தவில்லை. ஆனால் இந்த வழக்கில் தற்போது புதிய தடயங்கள் இல்லை என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் கூறினார். மாறாக, வழக்கைத் தீர்ப்பதற்கான புதிய தடயங்களைக் கண்டறிய போலீசார் இன்னும் விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

இந்த வழக்கில் புதிய முன்னேற்றம் எதுவும் இல்லை, ஆனால் விசாரணை தொடர்கிறது என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார். ஆறு வயது குழந்தை கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி டாமன்சாரா  டாமாயில் காணாமல் போனார். மறுநாள்  இடமான் அடுக்குமாடியில் உள்ள அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ஒரு சிற்றோடைக்கு அருகில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கழுத்து மற்றும் உடலில் காயங்களைக் கண்டறிந்த பிரேத பரிசோதனை அறிக்கையைத் தொடர்ந்து சிறுவன் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. இது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் வழக்கை விசாரிக்க காவல்துறையைத் தூண்டியது. குழந்தையின் கொலை தொடர்பான விசாரணையில் கிடைத்த சில தகவல்கள் மற்றும் ஆதாரங்களை மறுபரிசீலனை செய்ய அனைத்துலக காவல்துறையின் (இன்டர்போல்) உதவியையும் போலீசார் நாடியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here