வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நிர்வாகம் தொடர்பில் மனிதவள அமைச்சகம், உள்துறை அமைச்சகமும் இணைந்து நடவடிக்கை

கோலாலம்பூர்:

நாட்டில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு உள்துறை அமைச்சகமும் மனிதவள அமைச்சகமும் இணைந்து செயற்பட உறுதிபூண்டுள்ளன என்று டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (ஜனவரி 3) புத்ராஜெயாவில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங்கை சந்தித்தபோது இரு அமைச்சர்களும் வெளிநாட்டு ஊழியர்களின் மேலாண்மை தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது” என்று உள்துறை அமைச்சர் கூறினார்.

“வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவது தொடர்பான பிரச்சினை, மலேசியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் சம்பளம், தங்குமிடம், சுகாதாரம் போன்ற அவர்கள் தொடர்பான நிர்வாகத்தை மேம்படுத்துவது தொடர்பான 2024 ஆம் ஆண்டிற்கான முன்னோடித் திட்டம் என்ற தலைப்பில் கலந்துரையாடினோம்,” என்று அவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here