ஜோகூர் மற்றும் பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,818 ஆக அதிகரிப்பு

கோலாலம்பூர்:

ஜோகூர் மற்றும் பகாங் மாநிலங்களில் வெள்ளம் காரணமாக வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை காலை 8 மணியுடன் ஒப்பிடும்போது சற்று அதிகரிப்பைக் காட்டுகிறது.

இன்று நண்பகல் 12மணி நிலவரப்படி, இரு மாநிலங்களிலும் உள்ள 77 நிவாரண மையங்களில் மொத்தம் 2,722 குடும்பங்களைச் சேர்ந்த 9,818 பேர் தங்கியுள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் (NADMA) தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள நாட்டின் பேரிடர் நிலை குறித்த சமீபத்திய அறிக்கையின்படி, ஜோகூரில் மொத்தம் 8,231 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோத்தா திங்கி மாவட்டத்தில் அதிகபட்சமாக 26 நிவாரண மையங்களில் மொத்தம் 1,290 குடும்பங்களை சேர்ந்த 4,739 பேர் தங்கியுள்ளனர், அதனைத்தொடர்ந்து ஜோகூர் பாருவிலுள்ள 12 நிவாரண மையங்களில் 536 குடும்பங்களை சேர்ந்த 1,977 பேரும், குளுவாங்கிலுள்ள 9 நிவாரண மையங்களில் 386 குடும்பங்களை சேர்ந்த 1,308 பேரும், சிகாமாட்டிலுள்ள 4 நிவாரண மையங்களில் 28 குடும்பங்களை சேர்ந்த 99 பேரும், கூலாயிலுள்ள ஒரு நிவாரண மையத்தில் 23 குடும்பங்களை சேர்ந்த 86 பேரும், பொந்தியானிலுள்ள ஒரு நிவாரண மையத்தில் 5 குடும்பங்களை சேர்ந்த 22 பேரும் என மொத்தம் 8,231 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பகாங்கிலுள்ள மூன்று மாவட்டங்களில் இயங்கிவரும் 23 நிவாரண மையங்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,549 ஆக அதிகரித்துள்ளது.

பெக்கானில் செயற்பாட்டிலுள்ள 11 நிவாரண மையங்களில் 219 குடும்பங்களை சேர்ந்த 808 பேரும், ரொம்பினிலுள்ள 11 நிவாரண மையங்களில் 215 குடும்பங்களை சேர்ந்த 716 பேரும், மாரானிலுள்ள 1 நிவாரண மையத்தில் 8 குடும்பங்களை சேர்ந்த 25 பேர் என மொத்தம் 450 பேர் தங்கியுள்ளனர்.

மேலும் சரவாக்கின் கூச்சிங்கில், தீ விபத்தில் தமது வீடுகளை இழந்துள்ள 38 பேர் அங்குள்ள ஒரு நிவாரண மையத்தில் இன்னமும் தங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here