கோத்தா பாரு:
கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மொத்தம் 131 மலேசிய ஆயுதப்படை உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 49 பேர் மலேசிய எட்டாவது காலாட்படை படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், மீதமுள்ளவர்களில் கிளந்தானில் 47 பேரையும், திரெங்கானுவில் 35 பேரையும் உள்ளடங்கியுள்ளது என்று துணை பாதுகாப்பு அமைச்சர் அட்லி ஜஹாரி கூறினார்.
எனவே படைவீரர்களின் வீடுகளைப் பழுதுபார்ப்பது போன்ற பொருத்தமான உதவிகளை படைவீரர் விவகாரங்கள் திணைக்களம் (JHEV) பரிசீலிக்கும் என்றார்.
அத்தோடு இராணுவ உடைமைகள் மற்றும் முகாம்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது தொடர்பில் இதுவரையில் எந்த அறிக்கையும் வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.









