1 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு; மூவர் கைது

செம்பூர்ணா:

1 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்த முயன்ற மூவரின் துணிச்சலான முயற்சி, வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 3 ஆம் தேதி போலீசார் மேற்கொண்ட சோதனையில், செம்பூர்ணா படகுடத்துறையிலிருந்து அண்டை நாட்டிற்கு கடத்தப்படவிருந்த சியாபு என்று நம்பப்படும் 20 கிலோகிராம் போதைப்பொருளை அவர்கள் கைப்பற்றியதுடன், 36 முதல் 38 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்கள் மற்றும் ஒரு வெளிநாட்டவர் ஆகியோரையும் கைது செய்ததாக செம்பூர்ணா மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா தெரிவித்தார்.

“மூன்று ஆடவர்கள் ஒரு படகில் ஏறி, படகுடத்துறையை நோக்கு வந்ததனர், ஆனால் போலீஸின் நடமாட்டத்தை கவனித்த சந்தேக நபர்களில் ஒருவர் கடலில் குதித்துள்ளார், மற்றொரு சந்தேக நபர் பாறை கரையை நோக்கி ஓடினார், மற்றொரு சந்தேக நபர் படகின் இயந்திரத்தை இயக்கி தப்பிக்க முயன்றார், ஆனால் அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். ” என்று இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 089-782 020 அல்லது விசாரணை அதிகாரி ஆய்வாளர் அட்சிலீ சுய்லி (014-866 5087) ஐ தொடர்பு கொள்ளலாம் என்று முகமட் ஃபர்ஹான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here