சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர்:

சரவாக்கில் வெள்ளம் காரணமாக நிவாரண மையத்தில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை, நேற்றிரவு (ஜனவரி 20) 444 ஆக இருந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 459 பேர் அங்குள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பான நட்மாவின் தேசிய பேரிடர் கட்டளை மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய பேரிடர் அறிக்கையின்படி, 120 குடும்பங்களைச் சேர்ந்த 404 பேர் பெத்தாங்கில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பிந்துலுவில் உள்ள ஒரு நிவார।அ மையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஜோகூரில், சிகாமாட்டில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை மாறாமல் உள்ளது, அதாவது 19 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here