காணாமல் போன மீனவர் Chenderoh அணைக்கு அருகே சடலமாக மீட்கப்பட்டார்

ஈப்போ, Chenderoh Dam அணையில் படகு மூழ்கியதில் காணாமல் போன 30 வயது ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் சயானி சைடன் கூறுகையில், பலியானவர் முஹம்மது கைருல் ருசிதான், ஞாயிற்றுக்கிழமை (ஜன 21) காலை 8.37 மணியளவில் மீட்புப் பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டார்.

அந்த இடத்தில் உள்ள துறையின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்பட்டதாக சயானி கூறினார். அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) புயலின் போது அவர்களின் படகு மூழ்குவதற்கு முன்னர் பாதிக்கப்பட்டவரும் 41 வயதுடைய நபரும் அணையில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் நண்பர் அவரை மீட்க முயன்றார். ஆனால் தோல்வியடைந்தார். அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றவர்களால் நண்பர் மீட்கபட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here