5 வாகனங்கள் மோதல்; இருவர் பலி

­டெங்கில் ஜாலான் பந்திங்கில் ஐந்து வாகனங்கள் மோதியதில் பத்து வயது குழந்தையும் 40 வயதுடைய ஒரு பெண்ணும் உயிரிழந்தனர். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தாரைத் தொடர்பு கொண்டபோது, ​​இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும் 20 வயதுடைய ஒரு பெண்ணின் காலில் காயம் ஏற்பட்டதாகவும் பின்னர் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறினார்.

நான்கு வாகனங்கள் மீது லோரி மோதியதில் கார் ஒன்று நசுங்கியது என்றும் அவர் கூறினார். பலியானவர்கள் அனைவரும் காரில் இருந்தவர்கள் என்றும் அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அஹ்மத் முக்லிஸ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here