தீ விபத்தில் இருந்து நான்கு வயது குழந்தை உட்பட 7 பேரை காப்பாற்றிய ஆடவர் மரணம்

இன்று அதிகாலை லாபுவானில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து நான்கு வயது குழந்தை உட்பட 7 அண்டை வீட்டாரைக் காப்பாற்றிய 41 வயது நபர் உயிரிழந்தார். லாபுவான் போலீஸ் தலைவர் Hamizi Halim, அந்த நபர் பாதிக்கப்பட்டவர்களின் பக்கத்து வீட்டுக்காரர் என்றும், அவரது இரண்டு மாடி வீட்டில் அதிகாலை 4.17 மணியளவில் தீ பிடித்ததாக  கூறினார்.

பெரித்தா ஹரியனின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு வந்த பிறகு அந்த நபர் சோர்வடைந்ததாக உணர்ந்ததாகவும், இறுதியில் மயக்கமானதாகவும் ஹமிசி கூறினார். Cardiopulmonary resuscitation  (CPR) வழங்கப்பட்டது

. ஆனால் பாதிக்கப்பட்டவரை உயிர்ப்பிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தன. பாதிக்கப்பட்டவரின் மரணத்தை உறுதி செய்த மருத்துவ அதிகாரிகள், அதிகப்படியான புகையை சுவாசித்ததால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாக சந்தேகிக்கின்றனர். பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

வீட்டின் முன் இருந்த குடும்பத்தினருக்குச் சொந்தமான வாகனம் தீப்பிடித்ததை அடுத்து தீ பரவியிருக்கலாம் என தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் சந்தேகிக்கின்றனர். பின்னர் தீ மளமளவென வீட்டுக்கும் பரவியது. வாகனம் தீப்பிடித்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here